ஆதி மந்திரம்


இல்லை இல்லை
இல்லை என்பதில்லாமல் எதுவுமில்லை
இருப்பதில்லாமல் இல்லையும் இல்லை
இல்லை இல்லை


ஆதி தாயே
இல்லா இருப்பே
அருள்வாய்
இல்லா இருப்பே
ஆதி தாயே


இல்லா நீயிருக்க
இருக்க நானிருக்க
இல்லாதது உண்டோ
இவ்வுலகில்
இல்லாதது உண்டோ
இருக்க நானிருக்க
இல்லா நீயிருக்க


அத்தனையும்
அருளப்பெற்றேன்
ஆதி
அருளப்பெற்றேன்
அத்தனையும்



செல்வ ஆதித்தன்.கு



=========================================



இருப்பதுவும் எதுவுமில்லை
இழப்பதும் எதுவுமில்லை
உன்னுள் கண்டால்
இழப்பதும் எதுவுமில்லை
இருப்பதும் எதுவுமில்லை


பாரினிலே
பாரப்பா பார்
தந்திரம் கற்றார்
மந்திரம் விட்டார்
தாயை மறந்து
மந்திரம் விட்டார்
தந்திரம் கற்றார்
பாரப்பா பார்
பாரினிலே



கா கா காகம்
கையிலாய வர்க்கம்
கண்டு தெளிந்தார்
பூரணம்
கண்டு தெளிந்தார்
கையிலாய வர்க்கம்
கா கா காகம்





விட விட வீடு
விட்டயிடம் வீடு
உறங்கிப் போனயிடம் வீடு
உயிரற்றுப் போனயிடம் வீடு
கட்டினவர் கட்டுவாரே பார்
உயிரற்றுப் போனயிடம் வீடு
உறங்கிப் போனயிடம் வீடு
விட்டயிடம் வீடு
விட விட வீடு


தவம் இருப்பார்
தவறு காண்பார்
தப்பிக்க நினைப்பார்
தட்டாது நின்று
தப்பிக்க நினைப்பார்
தவறு காண்பார்
தவம் இருப்பார்

தட்டாது நின்று

தவம் இருப்பார்
தவறு காண்பார்
தப்பிக்க நினைப்பார்
தட்டாது நின்று
தப்பிக்க நினைப்பார்
தவறு காண்பார்
தவம் இருப்பார்

ஆதி மந்திரம்

இல்லை இல்லை
இல்லை என்பதில்லாமல் எதுவுமில்லை
இருப்பதில்லாமல் இல்லையும் இல்லை
இல்லை இல்லை

ஆதி தாயே
இல்லா இருப்பே
அருள்வாய்
இல்லா இருப்பே
ஆதி தாயே

இல்லா நீயிருக்க
இருக்க நானிருக்க
இல்லாதது உண்டோ
இவ்வுலகில்
இல்லாதது உண்டோ
இருக்க நானிருக்க
இல்லா நீயிருக்க

அத்தனையும்
அருளப்பெற்றேன்
ஆதி
அருளப்பெற்றேன்
அத்தனையும்

செல்வ ஆதித்தன்.கு

=========================================

இருப்பதுவும் எதுவுமில்லை
இழப்பதும் எதுவுமில்லை
உன்னுள் கண்டால்
இழப்பதும் எதுவுமில்லை
இருப்பதும் எதுவுமில்லை

பாரினிலே
பாரப்பா பார்
தந்திரம் கற்றார்
மந்திரம் விட்டார்
தாயை மறந்து
மந்திரம் விட்டார்
தந்திரம் கற்றார்
பாரப்பா பார்
பாரினிலே

கா கா காகம்
கையிலாய வர்க்கம்
கண்டு தெளிந்தார்
பூரணம்
கண்டு தெளிந்தார்
கையிலாய வர்க்கம்
கா கா காகம்


விட விட வீடு
விட்டயிடம் வீடு
உறங்கிப் போனயிடம் வீடு
உயிரற்றுப் போனயிடம் வீடு
கட்டினவர் கட்டுவாரே பார்
உயிரற்றுப் போனயிடம் வீடு
உறங்கிப் போனயிடம் வீடு
விட்டயிடம் வீடு
விட விட வீடு


தவம் இருப்பார்
தவறு காண்பார்
தப்பிக்க நினைப்பார்
தட்டாது நின்று
தப்பிக்க நினைப்பார்
தவறு காண்பார்
தவம் இருப்பார்

கூப்பிட்ட குரலுக்கு எதிரழைத்தாள்


கூப்பிட்ட குரல் கேட்ட தாய்
கூப்பிட்டாள் வா என்று,
கூப்பிட்ட திசைக்கு சென்ற எனக்கு, காட்சியும் தந்தாள்.

மத்தாப்பாய் ஜொலிக்கும் அவளிடம்
அமிர்தமும் கேட்பேன் உண்பேன்
நான் அவள் பிள்ளை.


02- ஏப்ரல் - 2015 - மதியம்
பங்குனி 19

கடவுள் - நீங்கள் பார்க்கலாம்


கடவுள் என்பதற்கு நீங்கள் என்ன என்னென்ன உறுதிப்பாடு கொண்டிருக்கிறீர்களோ, அவை அனைத்தினையும் செய்ய வல்லான் மனிதன்.  அவன் நீங்களாகவும் இருக்கலாம், உங்களை தெளிந்து பாருங்கள்.

ஆதிக்கு ஆதி, ஆதிபராசக்தி. அச்சக்தியினை கட்டுக்குள் கொண்டவன் கடவுள், இல்லை இவள் கட்டுப்பாடுக்குள் சென்றதால் அவன் கடவுள்.

சொல்லுக்குச் சொல்லாய் சொல்ல வல்ல விடயங்கள் பலவற்றினையும் சித்தர்கள் அருளியுள்ளனர். அவற்றினை நீயும் தெளிந்து கட்டுப்பாடுடன் நடந்து கொண்டால் நான் என்ற நாதனை அடக்கி தான் என்ற உண்மை புரிந்து சக்தியின் அருளால் வல்லவன் ஆகலாம். 

வல்லவனுக்கு வல்லானாய் சிவனை கைதொழுது காரியத்தில் இறங்கினால் ஜெயம் ஜெயம்.


ஆடு ஆடு ஆளும் பூதம் ஆள ஆடு

ஆடு ஆடு
ஆட்ட ஆட்ட ஆடு

ஆட்டம் கலைந்திடா
ஆடியது நினைவிலா
ஆட்டம் ஆடு

ஆட்கொள்ளும் சூழலிலும்
ஆட்கொல்லும் நிலையிலும்
ஆட அதிரவே
ஆதினம் மறையவே
ஆட்டம் ஆடு

ஆஅண்ட மேடையிலே
ஆதாய பகல்
ஆட்டம் ஆடு

ஆட்ட ஆடுபவன்
ஆட ஆட
ஆட்டம் ஆடு

ஆடு ஆடு
ஆட்ட ஆட்ட ஆடு - நீளா
ஆணி அடித்து ஆடு
ஆத்மம் வெல்லாதா ஆடு

ஆட்டுபவன் ஆட
ஆத்ம நடிகனாய்
ஆடு ஆடு
ஆணி அடித்து ஆடு
ஆத்மம் வெல்லாதா ஆடு

ஆடு ஆடு
ஆட்ட ஆட்ட ஆடு
ஆள ஆடு
ஆளும் பூதங்களை
ஆள ஆடு

தாய் தமிழ்


தாய்த் தமிழ் போற்றி
தகப்பன் ஈசன் போற்றி
தன் மெய்யுடல் போற்றி
தக சமாதி போற்றி

காளி... காளி...


காளி... காளி...
கற்பனைத் தாயே காளி
கட்டிவற்ற கோட்டக்குள்ள
காத்திருக்கும் காளி

கால்கள் இரண்டு
கைகள் பத்து
கூட்டி வைத்தும் காணலையோ

கழுத்து நிறைய தலைகள்
கோர்த்தும் போதலையோ

வீணாய் போன பகட்டறிவு
விலங்காய் பார்க்க விளைகிறதோ

கல்லைக் கொண்டு வடித்தாலும்
கற்றல் பெண்ணவள் புரியலையோ

பெருமை கண்டவளின்
பொறுமை காண்டு தாக்கிறீயோ

தாழாத வலி சேர்ந்தால்
தீர தாக்கல் வினை புரியாதா

வீரம் விளைந்த மண்ணில்
விளைச்சல் தானடா காளி

சிலம்பு தூக்கியவள் கண்ணகி
காலையும் தூக்குவாள் காளி

கல்லைக் காட்டி
கண்ணில் குத்தினால் புரியாதா

அறிவுகெட்ட ஜீவனே
நெஞ்சில் குத்தி மண்ணில் கிடத்தினால் புரியுமா!

கடவுள் என்பது கற்பனைச் சொல்லடா
கட்டியெழுப்பப்பட்ட சக்தியின் விழிம்படா
பகுத்தறிவாளன் வடித்த பாதையடா

கடவுள் என்ற பயம் போய்
கட்டுகள் திருடும் இடமாய்
கட்டவிழ்த்த சாதனையவிட
பதரறிவு செய்துவிட்ட தென்ன?

ஜான் வயிற்றுக்கு படியளக்காதவள்
வாளெடுத்து படையெடுப்பாளா?
பதரறிவாளனே!
பகட்டுக்கு சூடி அழகு பார்ப்பது ஏன்?
பகுத்தறிவாளரின் புதுமை புரியலையோ!
புகுத்தினாலும் தேயா வளமை தெரியலையோ!

நித்தம் நீந்துபவன்
திருநீறு பூண்டவன்
கண்டு கொண்ட கடவுள்
காணா கடவுளாக
காண்பது பகுத்தறிவா? பதரறிவா?

சிவராத்திரி


sa va pi