காளி... காளி...
கற்பனைத் தாயே காளி
கட்டிவற்ற கோட்டக்குள்ள
காத்திருக்கும் காளி
கால்கள் இரண்டு
கைகள் பத்து
கூட்டி வைத்தும் காணலையோ
கழுத்து நிறைய தலைகள்
கோர்த்தும் போதலையோ
வீணாய் போன பகட்டறிவு
விலங்காய் பார்க்க விளைகிறதோ
கல்லைக் கொண்டு வடித்தாலும்
கற்றல் பெண்ணவள் புரியலையோ
பெருமை கண்டவளின்
பொறுமை காண்டு தாக்கிறீயோ
தாழாத வலி சேர்ந்தால்
தீர தாக்கல் வினை புரியாதா
வீரம் விளைந்த மண்ணில்
விளைச்சல் தானடா காளி
சிலம்பு தூக்கியவள் கண்ணகி
காலையும் தூக்குவாள் காளி
கல்லைக் காட்டி
கண்ணில் குத்தினால் புரியாதா
அறிவுகெட்ட ஜீவனே
நெஞ்சில் குத்தி மண்ணில் கிடத்தினால் புரியுமா!
கடவுள் என்பது கற்பனைச் சொல்லடா
கட்டியெழுப்பப்பட்ட சக்தியின் விழிம்படா
பகுத்தறிவாளன் வடித்த பாதையடா
கடவுள் என்ற பயம் போய்
கட்டுகள் திருடும் இடமாய்
கட்டவிழ்த்த சாதனையவிட
பதரறிவு செய்துவிட்ட தென்ன?
ஜான் வயிற்றுக்கு படியளக்காதவள்
வாளெடுத்து படையெடுப்பாளா?
பதரறிவாளனே!
பகட்டுக்கு சூடி அழகு பார்ப்பது ஏன்?
பகுத்தறிவாளரின் புதுமை புரியலையோ!
புகுத்தினாலும் தேயா வளமை தெரியலையோ!
நித்தம் நீந்துபவன்
திருநீறு பூண்டவன்
கண்டு கொண்ட கடவுள்
காணா கடவுளாக
காண்பது பகுத்தறிவா? பதரறிவா?
No comments:
Post a Comment