பாரினிலே பாரப்பா பார் தந்திரம் கற்றார் மந்திரம் விட்டார் தாயை மறந்து மந்திரம் விட்டார் தந்திரம் கற்றார் பாரப்பா பார் பாரினிலே
கா கா காகம் கையிலாய வர்க்கம் கண்டு தெளிந்தார் பூரணம் கண்டு தெளிந்தார் கையிலாய வர்க்கம் கா கா காகம்
விட விட வீடு விட்டயிடம் வீடு உறங்கிப் போனயிடம் வீடு உயிரற்றுப் போனயிடம் வீடு கட்டினவர் கட்டுவாரே பார் உயிரற்றுப் போனயிடம் வீடு உறங்கிப் போனயிடம் வீடு விட்டயிடம் வீடு விட விட வீடு
தவம் இருப்பார் தவறு காண்பார் தப்பிக்க நினைப்பார் தட்டாது நின்று தப்பிக்க நினைப்பார் தவறு காண்பார் தவம் இருப்பார்
கூப்பிட்ட குரலுக்கு எதிரழைத்தாள்
கூப்பிட்ட குரல் கேட்ட தாய்
கூப்பிட்டாள் வா என்று,
கூப்பிட்ட திசைக்கு சென்ற எனக்கு, காட்சியும் தந்தாள்.
மத்தாப்பாய் ஜொலிக்கும் அவளிடம்
அமிர்தமும் கேட்பேன் உண்பேன்
நான் அவள் பிள்ளை.
No comments:
Post a Comment